பக்ரீத் பண்டிகையை முன்னிட்டுமாதவரத்தில் களை கட்டிய ஆட்டு சந்தை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டு சந்தையில் இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் விற்பனைக்கு வந்து இறங்கியது.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டு சந்தையில் இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் விற்பனைக்கு வந்து இறங்கியது. தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையை நாளை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் குர்பானிக்காக ஆடுகள் வாங்கி அதனை இறைவனுக்காக அறுத்து பலி கொடுப்பார்கள். காலம் காலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபி ஆட்டை பலி கொடுத்தது தியாகத் திருநாளை தொடர்ச்சியாக கொண்டாடி வருவது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாதவரம் ஆட்டு சந்தையில் தமிழ்நாடு ,ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஆடுகள் லாரிகளில் வரத் தொடங்கியுள்ளது இங்கு இறக்குமதி செய்யப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் விற்பனை கடத்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ஒரு ஆட்டின் எடை 10 கிலோவிற்கு மேலாக ஒரு ஆடு பன்னிரண்டாயிரம் ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. தற்போது பள்ளிகள் திறந்து குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டி வருவதால் பெரும்பாலா பெற்றோர்கள் கல்விச்செலவை ஈடு கட்டி வரும் நிலையில் இந்த பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஆடு வாங்குவதில் சிறிது தயக்கம் காட்டி வருகின்றனர். கோடை வெயிலின் காரணமாக வியாபாரமும் மந்த நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் விலை சற்று குறைந்த அளவில் விற்கப்பட்ட ஆடுகள் தற்போது விலை ஏற்றமாக உள்ளதாலும் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்படுகிறது. மேலும் பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் ஆடுகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சுமார் 20 கோடிக்கு மேல் விற்பனையாகும் தெரிவித்தனர்.
Next Story