குமரி : சேவை நிறுவனங்களுக்கு பரிசு

X
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் 2025ம் வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு ரொக்க பரிசு, தங்க பதக்கம் மற்றும் சான்று வழங்கப்பட உள்ளதால் குமரி மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்களில் உரிய தகுதியுடையவர்கள் இணையதளத்தின் வாயிலாக 12- 6- 2025க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இவ் விருதிற்கான விண்ணப்ப விபரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில்https:// awards.tn.gov.in விண்ணப்பித்து அதன் நகலினை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம் தரைத்தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தொலைபேசி எண்: 04652 - 278404 மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

