அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
3 நாட்கள் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விட்டீர்கள் 10ஆம் வகுப்பை விட்டு செல்லுங்கள் அல்லது பள்ளியை விட்டே சென்று விடுங்கள் என்று கூறிய அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை மீது ஆட்சியரிடம் பெற்றோருடன் வந்து 3 மாணவர்கள் பரபரப்பு புகார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மூன்று பள்ளி மாணவர்களை பட்டியலின மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்று கூறி ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்து மாணவர்கள் மூன்று பேரிடம் அவர்களின் பெற்றோர்களை வரவைத்து கட்டாயமாக கையொப்பம் பெற்று பள்ளியை விட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு ஐடிஐ யில் வேலைக்கி டை க்கும் போய் சேருங்கள் என்று கூறிய தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகிய 2பேர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தரப்பில் பெற்றோர்களுடன் வந்து ஆட்சியர் பிரதாப்பிடம் புகார் மனு அளித்தனர் நாளை பள்ளிக்கு வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பிரதாப் பெற்றோர்களுக்கு உறுதியளித்தார்
Next Story




