தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ பக்ரீத் வாழ்த்து

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ பக்ரீத் வாழ்த்து
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :- உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகையாக பெருமைக்குரிய பக்ரீத் பண்டிகை விளங்குகிறது. இத்திருநாளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் அசைவ உணவுகளை சமைத்து பிறருக்கு பகிர்ந்தளித்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்நாளில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு செல்லும் போது உறவினர்களையும், நண்பர்களையும் ஆரத் தழுவி, அன்பு செலுத்தி வாழ்த்துச் சொல்லும் சிறப்புமிகு பண்டிகையாக இப்பண்டிகை திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக குர்பானி கொடுக்கப்படுகிறது. தன்னிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதற்கும், பிறர் நலன் காக்க உதவுவதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தத்துவமாகும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பண்பை கடைபிடிக்க வேண்டும். பிறருக்கு உதவி புரிந்து மனிதத்துவத்தின் மாண்பினை காத்திட வேண்டியது நமது தலையாய கடமையாகும். அனைவருக்கும் கொடுத்து மகிழும் இப்பண்டிகை திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய தியாகத் திருநாள் என்னும் பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story