மது போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

மது போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி
X
காங்கேயம் அருகே மது போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி
காங்கேயம் வெள்ளறை பாறை அருகே தங்கி காங்கேயத்தில் கூலி வேலை பார்த்து வந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 21). இவர் கடந்த மாதம் 30 -ந்தேதி இரவு மது அருந்திவிட்டு மதுபோதையில் அருகில் இருந்த விஷத்தன்மை கொண்ட கரையான் மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்து வந்த சஞ்சய்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story