பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு நவலடி ராஜா புத்தாடைகள் வழங்கினார்.

X
Paramathi Velur King 24x7 |7 Jun 2025 6:24 PM ISTபக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கு நவலடி ராஜா புத்தாடைகள் வழங்கினார்.
பரமத்திவேலூர் ஜூன் 7: முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் பிறந்த நாளையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் நவலடி ராஜா ஏற்பாட்டில் பரமத்தி வேலூர் சகன்வல்லி தர்காவில் பக்ரித் திருவிழா கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கு புத்தாடைகளை திமுகவினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் முருகன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கழகத்தினர் மற்றும் தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story
