கோவை: கூலி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் !

கோவை: கூலி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் !
X
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டம் சோமனூரில் நடைபெற்றது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டம் சோமனூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான கூலி உயர்வு இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்ற காரணத்தால், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சோமனூர் பகுதியில் 15% மற்றும் பிற பகுதிகளில் 10% கூலி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், 2024 ஏப்ரல் 21 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கூலி உயர்வுக்காக ஜூன் 16 முதல் 18 வரை அவிநாசியில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு மற்றும் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Next Story