கருமாரியம்மன், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கருமாரியம்மன், சக்தி விநாயகர் கோவில்  கும்பாபிஷேக விழா
X
குமாரபாளையம் கருமாரியம்மன், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம், பூலக்காடு கருமாரியம்மன், சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, மே, 25ல், முகூர்த்தக்கால் அமைப்பது முதல் தொடங்கியது. கணபதி யாகம் மற்றும் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அம்மன் சர்வ அலங்காரத்துடன் ஊர்வலமாக, அருள்பாலித்தவாறு வந்தார். நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று காலை 09:00 மணியளவில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அம்மனுக்கும், சக்திவிநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. கும்பாபிஷேக விழா மற்றும் யாக சாலை பூஜைகளை தாரமங்கலம், வரதராஜ பெருமாள் கோவில் பரம்பரை ஸ்தானிகர் கோகுல் ஐயர் குழுவினர் நடத்தினர். இந்த விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story