ருத்ராட்ச அலங்காரத்தில் ஆதி சிவன்
மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் கோயிலில் நேற்று (ஜூன்.8)மாலை பிரதோஷத்தை முன்னிட்டு ஆதி சிவனுக்கு அபிஷேகங்கள் ருத்ராட்சம் கொண்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story





