நெடுங்கல் பகுதியில் பனைமரத்தில் மோதி சாய்ந்த அரசு பேருந்து.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்துள்ள நெடுங்கல் கிராமத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து அரசம்பட்டிக்கு சென்ற அரசுபேருந்து சென்ற போது நெடுங்கல் கிராமம் அருகில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்தின் மீது மோதியது. இதில் பயணித்த 15 பேர் காயம் இன்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் பேருந்தை அப்புற படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story

