காங்கேயத்தில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

X

காங்கேயத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
காங்கேயம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில் போலீசார் அவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 45 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
Next Story