ஒன்பதாம் வகுப்பு மாணவி மாயம். தந்தை புகார்

X
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கிருஷ்ணாபுரம் மருதையா தேவர் வடக்கு தெருவில் வசிக்கும் கருப்புசாமி என்பவரின் 14 வயது மகள் டி. கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (ஜூன் .8) பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஜூன் .9) அவரது தந்தை எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர் .
Next Story

