மத்தூர் அருகே கோட்டூர் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.

X

மத்தூர் அருகே கோட்டூர் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ராசிபுரம் ரோட்டரி கிளப் மற்றும் வின்னர் சமூகக் குழு உள்ளிட்ட நண்பர்கள் பெற்றோர்கள் ஆகியோர் முயற்சியால், புதிய வகுப்பறையை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். ஏ.ஞானசேகரன் என்பவர் ரூ.30.000 மதிப்பில் பள்ளிக்கு சிசி டிவி கேமிராக்களை அமைத்துக் கொடுத்துள்ளார்.மேலும் பள்ளியின் பெற்றோரான ஷெரிப் மற்றும் சபியுல்லா ஆகியோர் இணைந்து ரூ.70000 மதிப்பில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் (ஆர்ஓ) வசதியை செய்துகொடுத்துள்ளார். முன்னதாக தலைமை ஆசிரியர் கு.மௌனசுந்தரி வரவேற்பு ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story