ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு...*

X

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அலுவலகத்தில் செயல் அலுவலரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து ஆய்வு செய்த போது இடையபொட்டல் தெருவில் 7 ஏக்கர் 49 சென்ட் பரப்பளவில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான குசவன் கோயில் நந்தவனம் இருந்தது ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இதில் 2 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை கண்டறிந்த அதிகாரிகள், ஜிஜிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் நில அளவீடு செய்து, கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டாள் கோயில் பெயரில் பட்டா பெற்றனர். இதையடுத்து பட்டா பெற்ற இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 2023 நவம்பர் மாதம் அளவீடு செய்ததில் 70க்கும் மேற்ப்பட்ட வீடுகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 13 கடைகள், ஒரு மண்டபம் மற்றும் கருங்கச்சைக்காரன் கோயில் கல் மண்டபம், சக்கரத்தாழ்வார் மற்றும் விநாயகர் கோயிலை சுற்றி உள்ள இடம் வாகன நிறுத்துமிடமாக இருப்பது தெரியவந்தது. கருங்கச்சைக்காரன் மற்றும் சக்கரத்தாழ்வார் கோயில் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி, சேதுநாராயணபுரம் மற்றும் தேனி மாவட்டம் அனுமந்தம்பட்டியைச் சேர்ந்த யாதவ சமூக மக்களின் குல தெய்வம் ஆகும். விழா காலங்களில் பொதுமக்கள் மண்டபம் மற்றும் சுற்றி உள்ள இடங்களில் தங்கி இருந்து வழிபாடு நடத்தும் மக்கள், பிற நாட்களில் வாகன காப்பகத்துக்கு வாடகைக்கு விட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் கல் மண்டபம் மற்றும் சக்கரத்தாழ்வார் கோயிலை சுற்றி உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒப்பந்தத்திற்கு இடைக்கால தடை விதித்து, கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டது. கருங்கச்சைக்காரன் கோயில் திருவிழா கொண்டாடுவதற்கு வந்த மக்கள் மண்டபத்தை சுற்றி கொட்டகை அமைக்க கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், செயல் அலுவலரை கண்டித்து கோயில் அலுவலகம் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து பொதுமக்களை செயல் அலுவலரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள், என்றார். இதையடுத்து புதன்கிழமை செயல் அலுவலரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர். ஸ்டாலின் ஆட்சியில் இந்துக்களின் விழாக்களுக்கு தடை போடுவதும் நடக்கும் பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் பொதுமக்களிடையே ஸ்டாலின் ஆட்சியின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது என்று சமூக ஆர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story