தீப்பாஞ்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

தீப்பாஞ்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
X
காட்டுக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் இறைவன்காடு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் இன்று காலை 6 மணி அளவில் தீப்பாஞ்சி மற்றும் காளியம்மனுக்கு பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story