கிருஷ்ணகிரி அருகே சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்.

X
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பொன்மலை ஸ்ரீதேவி பூதேவிசமேத கல்யாண சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது இதை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், ஹோமங்கள் நடந்தன. பின்னர் சாமிக்கு மாலை மாற்றி வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வாங்கப்பட்டது.
Next Story

