உத்தனப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.

X

உத்தனப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள பெரிய பேட்டகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (41) ஓசூர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். சம்பவம் அன்று அவர் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் கடன் பிரச்சினையால் கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story