ராயக்கோட்டை அருகே பேக்கரி கடைகாரரை தாக்கியவர் கைது.

X

ராயக்கோட்டை அருகே பேக்கரி கடைகாரரை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள பட்டிபாறையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (44) இவர் ராயக்கோட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவருடைய கடைக்கு தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த டிரைவர் அழகு (29) என்பவர் வந்து 150 ரூபாய்க்கு தின்பண்ட பொருட்கள் வாங்கியுள்ளர். ஆனால் அழகு ரூ.100 கொடுத்துள்ளார். இதனால் கோவிந்தராஜ் மீதி தொகையை கொடுக்குமாறு கூறினார். அழகு தர மறுக்கவே அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது.. இதில் ஆத்திரமடைந்த அழகு கோவிந்தராஜை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுவை கைது செய்து செய்து விசாரணை நத்தி வருகின்றனர்.
Next Story