பேய் அழைப்பதாக எழுதி வைத்து வாலிபர் தற்கொலை

பேய் அழைப்பதாக எழுதி வைத்து வாலிபர் தற்கொலை
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் குருந்தன்கோடு அடுத்த காடேற்றி என்ற இடத்தை சேர்ந்தவர் ராமசுப்பு ( 55). மர வேலை செய்து வருகிறார். இவருக்கு இசக்கிமுத்து என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். இசக்கிமுத்து வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கிமுத்துவிற்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இவர் வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு நடத்திய சோதனையில் இசக்கிமுத்து இறக்கும் முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும் அதனால் அதனுடன் செல்வதாகவும் எழுதி வைத்துள்ளார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story