பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது
X
வத்தலகுண்டு அருகே டூ வீலர் மோதியதில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்த தி.மு.க., நிர்வாகி வீடு உட்பட இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
திண்டுக்கல் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில்பட்டியை சேர்ந்த செல்லத்துரைக்கும் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷிற்கும் டூவீலர் மோதி கொண்டதில் தகராறு ஏற்பட்டது. இதை தி.மு.க., ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கண்ணன் சமரசம் செய்துள்ளார். இதன் காரணமாக கண்ணன் வீட்டருகே அதே பகுதியில் மேலும் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் கொண்டு வீசிய இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்த போது கத்தியால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசிய பழைய வத்தலகுண்டு, கலைஞர் காலனியை சேர்ந்த மணிபாண்டி (26) என்பவரை கைது செய்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வந்த மணிபாண்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story