மனைவி மகன் மாயம். கணவர் புகார்.

மனைவி மகன் மாயம். கணவர் புகார்.
X
மதுரை உசிலம்பட்டி அருகே மனைவி மற்றும் மகனை காணவில்லை என்று கணவர் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 7ம் தேதி உறவினரின் இல்ல விழாவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பொழுது வீட்டில் இருந்த அவரது மனைவி புவனேஸ்வரி (26) மற்றும் 2 வயது மகன் ஆகியோர் வீட்டில் இல்லாமல் வெளியே சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவர்களை பல இடங்களின் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஜூன் .11) காலை வாலந்தூர் காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story