ஆனம்பாக்கத்தில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை

ஆனம்பாக்கத்தில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை
X
ஆனம்பாக்கம் கிராமத்தில், எம்.ஆர்.எப்., கார்ப்., லிமிடெட் நிறுவனம் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாய கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் கிராமத்தில், எம்.ஆர்.எப்., கார்ப்., லிமிடெட் நிறுவனம் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாய கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஆனம்பாக்கம் ஊராட்சி தலைவர் கோமளா தலைமை தாங்கினார். எம்.ஆர்.எப்., நிறுவன மேலாளர் பினாய் ஜோஷ் முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, புதிய சமுதாய கூடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அதில், எம்.ஆர்.எப்., நிறுவன எச்.ஆர்., ஜஸ்டின் ஆரோக்கிய தீபக், ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story