குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 12.06.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் T.மதியழகன் (தலைமையிடம்), M.பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேற்படி குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியின்படி, இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும். குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும், உளமார உறுதிகூறுகிறேன். என்று உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில்* குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Next Story



