தென்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை

தென்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை
X
மதுரை தென்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் ( 22) இவரது தாயார் இறந்து விட்டார்.இவரது தந்தை கேரளாவுக்கு சென்றதால் இவர் மட்டும் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மேலும் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் அடிக்கடி மது அருந்தி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது உறவினர்கள் கார்த்திக்கை தேடி அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது அழுகிய நிலையில் கார்த்திக் சடலமாக தொங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story