நீர் மின் உற்பத்தி நிலையம் அருகில் திடீர் மண் சரிவு

நீர் மின் உற்பத்தி நிலையம் அருகில் திடீர் மண் சரிவு
X
கோதையாறு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, அணைகளில் நீர் மட்டம் உயந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு மலையோர கிராம பகுதிகளில் கடுமழை பெய்தது. இதை அடுத்து நேற்று காலை 11 .30 மணியளவில் குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் மின் நிலையமான கோதையாறு நீர் மின் நிலைய பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு சேதமடைந்தது. ,     மேலும் நீர் மின் நிலைய பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்குள்ள  ஜெனரேட்டர் போன்றவை காவலர் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதில் பாறைகள் விழுந்ததில் ஜெனரேட்டர்  சேதமடைந்து, சாலையில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  சம்பவம்  அறிந்தவுடன் உடனடியாக நீர் மின் நிலை அதிகாரிகள், அங்குள்ள பணியாளர்கள், போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு தொடர்ந்து சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து நடந்த பகுதியில் விபத்து நேரம் மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால்   உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story