செஞ்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

X
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.இவர், கடந்த 10ம் தேதி பள்ளிக்கு வந்த போது, பின் தொடர்ந்து வந்த மேலாத்துார் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ஆதிகேசவன் 22; வழி மறித்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்து, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து ஆதிகேசவனை கைது செய்தனர்.
Next Story

