மின்சாரம் பாய்ந்ததில் லாரி டிரைவர் பலி

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் கண்டு குளம் அம்பிகா நகரை சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகன் சூரிய பாலாஜி (26) என்பவர் லாரி டிரைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் (ஜூன் .13)இரவு தவிடு ஏற்றிவந்த லாரியை உரிமையாளர் வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் மறுநாள் (ஜூன் .14) நேற்று காலை வந்து லாரியின் மேல் ஏறி தார்ப்பாயை சரி செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மேலிருந்து கீழே விழுந்தார் . அங்கிருந்தவர்கள் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார் . இது குறித்து அவரது தந்தை திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

