சந்தூர்: திரௌபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்- துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. இதில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடந்தது. துரியோதணன் வதம் செய்யும் காட்சியை நாடக கலைஞர்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தனர். பாக்க வந்த பக்தர்களின் திருஷ்டி விலக துடப்பத்தால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story



