திருமங்கலம் அருகே விடுமுறை எடுத்த மாணவியை பெற்றோர் திட்டியதால் மாணவியோடு சக மாணவியும் விஷமருந்தி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி

X
திருமங்கலம் அருகே விடுமுறை எடுத்த மாணவியை பெற்றோர் திட்டியதால் மாணவியோடு சக மாணவியும் விஷமருந்தி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி அவரது தோழியான ஒன்பதாம் வகுப்பு மாணவி இருவரும் இன்று காலை பள்ளிக்கு வருகை தந்த நிலையில் பள்ளிநுழைவு வாயில் அருகே இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.சக மாணவர்கள் உடனடியாக பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் அளித்துஆசிரியர்கள் மயங்கிய மாணவிகள் இருவரையும் கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக விருதுநகர்அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில்மாணவிகள் இருவரும் அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் என்பதும் இதில் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்து விடுமுறை எடுப்பதாக வீட்டில் கூறியதால் அவரது பெற்றோர் திட்டி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவி ஊரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த தனது தோழியான ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் கூறி தான் விஷம் அருந்தி தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். அதற்கு ஒன்பதாம் வகுப்பு மாணவி என் தோழியான நீயே சாக முடிவெடுத்ததால் நானும் உன்னோடு வந்து விடுகிறேன் எனக்கூறி இருவரும் ஊரில் இருந்த பெட்டிக்கடையில் ஒரு ஓரத்தில் இருந்த எறும்புபொடி பாக்கெட்டை எடுத்து யாருக்கும் தெரியாமல் தண்ணீரில் கலந்து இருவரும் குடித்து விட்டு பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்றனர். மாணவிகள் இருவரும் பள்ளி நுழைவு வாயில் அருகே சென்றபோது திடீரென மயங்கி விழுந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பள்ளி செல்ல மறுத்த மாணவியை பெற்றோர் திட்டியதால் மனம் வெறுத்த மாணவி எடுத்த தற்கொலை முடிவுக்கு உடன் இருந்த தோழியும் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

