ஊத்தங்கரை அருகே டூவீலருக்கு தீ வைத்து எரிப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் முத்துகிருஷ்ணன் என்பவர் அதிவேகத்தில் டூவீலரை ஓட்டிச் சென்றுள்ளார். இதை சரவணன் ஏன் அதிவேகத்தில் செல்கிறாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. கோபமடைந்த முத்துகிருஷ்ணன் இரவு அவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலருக்கு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு விசாரணை. மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

