அரக்கோணம் அருகே வாலிபர் பிணம் கண்டெடுப்பு

அரக்கோணம் அருகே வாலிபர் பிணம் கண்டெடுப்பு
X
வாலிபர் பிணம் கண்டெடுப்பு
அரக்கோணத்தை அடுத்த அகன் நகர் பகுதியில் உள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர். பிணமாக கிடந்தவருக்கு 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது மர்மநபர்கள் கொலை செய்து உடலை குளத்தில் வீசி விட்டு தப்பினார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story