விழுப்புரத்தில் திமுக பேனரை கிழித்தவர்கள் மீது வழக்கு பதிவு

விழுப்புரத்தில் திமுக பேனரை கிழித்தவர்கள் மீது வழக்கு பதிவு
X
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள தி.மு.க., அலுவலகம் அருகே, கட்சியினர் சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.கடந்த 16ம் தேதி மதுபோதையில் வந்த விழுப்புரம் கே.கே.ரோடு, அண்ணாநகரை சேர்ந்த சுகுமார், 31; பிரேம், 32; ஆகியோர் பேனரை கிழித்துள்ளனர். இது குறித்து, தி.மு.க., பிரமுகர் பூபாலன், 30; அளித்த புகாரின் பேரில், சுகுமார், பிரேம் ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, சுகுமாரை கைது செய்தனர்.
Next Story