வகுப்பறைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

X
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.64 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் கட்டடத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று ( ஜூன்-18) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் (பொ), வட்டாட்சியர் வடிவேல் உடனிருந்தனர்.
Next Story

