சோளிங்கர் அருகே மின்கம்பியை மிதித்த முதியவர் பலி

X
சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 75). இவரது மனைவி அம்சம்மாள். இவர் களுக்கு நான்கு பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.வயதான காலத்திலும் நரசிம்மன் விவசாயக் கூலி வேலை செய்து மனைவியுடன் வசித்து வந்தார். இவர் மாடுகளையும் மேய்க்க செல்வார். சம்பவத்தன்று மாடுகளை மேய்க்க சென்றபோது அறுந்து கிடந்த உயர்மின்னழுத்த கம்பியை மிதித்து விட்டார். இதில் நர சிம்மன் மின்சாரம் தாக்கி இறந்தார். அவர் மேய்ச்சலுக்கு ஓட் டிச்சென்ற 2 மாடுகளும் செத்தன.தகவலறிந்த கொண்ட பாளையம் போலீசார் அங்கு சென்று நர சிம்மன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர் பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

