ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் விஏஓ (பொறுப்பு ) பாண்டியராஜன் என்பவர் நேற்று முன்தினம் (ஜூன் .17) காலை அவரது உதவியாளர் தெரிவித்த தகவல் அடிப்படையில் திருமங்கலம் ரயில்வே நிலையம் அருகே அடையாளம் தெரியாத 58 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்த்த பின்பு இது குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் ? எப்படி இறந்தார்?என அறிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

