அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

X
Komarapalayam King 24x7 |19 Jun 2025 6:49 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் 2025-2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன். 2, முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து, கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத மாணாக்கர்கள் மற்றும் சேர்க்கை கிடைக்கப்பெறாத மாணாக்கர்கள், கல்லூரிக்கு வருகை தந்து, சேர்க்கைக் குழுவை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு கல்லூரி முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
