பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

X
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்,வாரம் தோறும் புதன் கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இதில் புதிதாக மனு கொடுக்க வந்த 29 மனுதாரர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட் அவர்கள் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்.
Next Story

