பெட்ரோல் பங்க் ஊழியர் மயங்கி விழுந்து பலி!

X
வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு பகுதியை சேர்ந்த சிற்றரசு (36). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில் பங்கில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிற்றரசை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிற்றரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
Next Story

