வாலாஜா அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

X
வாலாஜாவில் உள்ள கிராமினி தெருவை சேர்ந்தவர் ருக்மாங்கதன் (வயது 59), பெயிண்டர். இவரது மனைவி தீபா (46). தனியார் ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தீபாவுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தீபா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

