சேலத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

சேலத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் கடந்த மாதம் கஞ்சா விற்ற வழக்கில் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கண்ணன் மீது ஏற்கனவே அதே போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதனால் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து கண்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.
Next Story