ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகம்.

ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகம்.
X
ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் ஜூன்.21- பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு முகாம் போக்குவரத்து போலீசார் சார்பில் நடைபெற்றது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசக்கரவர்த்திஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் சார்பில் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது . வாகனத்தை பள்ளி சவாரி செல்லும் வாகனங்களுக்கு உரிய தகுதிச் சான்று, காப்புச் சான்று, முதலுதவி பெட்டி, டிரைவர் லைசென்ஸ், அனைத்தும் நிலுவையில் இருக்க வேண்டும்,. வாகனத்தில் ரேடியட்டர் தண்ணீர் எஞ்சின் ஆயில் வீல் பிரேக் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து பின்னர் வாகனத்தை எடுக்க வேண்டும். பள்ளி வாகனம் ட்ரிப் எடுக்க செல்லும்போது இடையில் எங்கும் பழுது ஏற்பட்டு நிற்கக்கூடாது. பள்ளி வாகனத்தில் பள்ளி சிறுவர் சிறுமிகளை ஏற்றி செல்கின்றோம் என்ற நினைவுடன் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது பள்ளி சிறுவர் சிறுமிகளை இறக்கும்போதும் ஏற்றும் போதும் இடது புறமாக வாகனத்தை நிறுத்தி மாணவர்களை இறங்கி சாலையை கடந்து சென்று விட்டாரா என்பதை கண்காணித்த பிறகே பஸ் மற்றும் வேன்களின் கதவை மூடிய பின் இயக்க வேண்டும். சிறுவர் சிறுமிகளை ஏற்றிச் செல்லும் போது வாகனத்திற்குள் சிறுவர் சிறுமிகள் கீழே விழுந்து வண்ணம் திடீரென பேருந்தை பிரேக் அடிக்க கூடாது. பள்ளி சிறுவர்களை பேருந்தில் ஏற்றி விடுவதற்கும் இறக்கி விடுவதற்கும் ஒருவர் இருக்க வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக முதலுதவி பெட்டிகள் அதில் உள்ள பொருட்களுடன் இருக்க வேண்டும். பேருந்தில் பிளாட்பார்ம் சரியான தரத்தில் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்திற்கு உரிய வேகத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வாகன ஓட்டுனர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story