குளச்சல் : படகில் சென்ற மீனவர் திடீர் சாவு

X
குமரி மாவட்டம் பிள்ளைதோப்பு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (70). இவர் நேற்று மாலை ஸ்டீபன் உட்பட ஏழு பேர் முட்டம் கடலில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது படகில் இருந்த ஸ்டீபன் திடீரென மயங்கி விழுந்தார். சக மீனவர் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்டீபன் இறந்துவிட்டதாக கூறினார்கள். மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. குளச்சல் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

