விபத்து : கல்லூரி மாணவன் உயிரிழப்பு

விபத்து :  கல்லூரி மாணவன் உயிரிழப்பு
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம்  மேல்புறம் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில் மகன் சஞ்சீவ் (17) பிளஸ் 2 முடித்துவிட்டு மார்த்தாண்டத்தில் ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்காக நேற்று கல்லூரிக்கு முதல் நாளாக சென்றார். கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர், பின்னர் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். செம்மங்காலை பகுதியில் சென்ற போது பைக் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதி நிலை தடுமாறி, எதிரே வந்த பள்ளி வேன்  மீது மோதியது. இதில் சஞ்சீவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் காயமடைந்த பெண்ணையும் நண்பரையும்  மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைர லாகி வருகிறது
Next Story