ஒண்ணுபுரத்தில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

ஒண்ணுபுரத்தில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
X
ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் தி.மலை மத்திய மாவட்ட அதிமுக ஜெ.பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் தி.மலை மத்திய மாவட்ட அதிமுக ஜெ.பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் திருமால் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு, வீடாகவும், பொதுமக்களிடமும், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களிடம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சேவூர் ஜெ.சம்பத், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பரத் ராஜேந்திரன், முன்னாள் அத்திமலைப்பட்டு பட்டு கூட்டுறவு சங்த தலைவர் சேவூர் பாலச்சந்தர், நகர மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, விநாயகம், மீனவரணி ஆனந்தன், பேரவை ஒன்றிய செயலாளர் புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story