திண்டுக்கல்லில் பிரச்சார இயக்கத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணி பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல்லில் பிரச்சார இயக்கத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணி பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
X
அரியலூர் அண்ணாசிலை அருகே திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், ஜூன்.22- திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி பிரச்சார இயக்கத்தில் புகுந்து  தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மற்றும்.பாரதிய ஜனதா கட்சி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரியலூர் மாவட்டம் அண்ணாசிலை அருகே சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இர.மணிவேல், பிதுரைசாமி, டிஅம்பிகா, வி.பரமசிவம், துரைஅருணன், கே.கிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கு  தா .பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆண்டிமடம் வட்ட செயலாளர் எம்.வேல்முருகன், செந்துறை வட்ட செயலாளர் கு.அர்ஜுனன், அரியலூர் ஒன்றிய செயலாளர் அ.அருண்பாண்டியன். திருமானூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சாமிதுரை உள்ளிட்டோ கண்டனம் தெரிவித்து பேசினர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.மலரக்கொடி, பி.பத்மாவதி, எஸ்.சரோஜினி, என்.அருணாச்சலம், எஸ்.மீனா, மூத்த தலைவர்கள் ஆர்.சிற்றம்பலம். ஏ.சௌரிராஜன் மற்றும் கிளை செயலாளர்கள். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து உண்டு கண்டன கோஷங்கள்  எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story