ஆக்கிரமிக்கப்பட்ட சாலையால் போக்குவரத்து பாதிப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட சாலையால் போக்குவரத்து பாதிப்பு
X
குமாரபாளையத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சாலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பழைய சார்பதிவாளர் அலுவலக வீதி உள்ளது. இந்த வீதியின் வழியாக ராஜா வீதி, இடைப்பாடி சாலை, காளியம்மன் கோவில் பகுதி, சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியாகும். இங்குள்ள பலரும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து, பல பொருட்களை வீடுகளின் முன்பு வைத்துள்ளனர். இதனால் இவ்வழியாக வரும் ஆட்டோ, கார், டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வசம் எச்சரிக்கை விடுத்து, அதனை அகற்றி, வாகன போக்குவரத்து எளிதில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story