சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின் ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு

சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின் ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு
X
சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் கும்மிடிபூண்டி, சூலூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு பிரிவு ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு இடவசதி கிடைக்கும். இதனால் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் நெரிசல் குறைவதோடு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story