அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

அரசு பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு  பாராட்டு
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் தருண்,மாணவி பபிஷா ஆகியோர் மாநில அரசின் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர். . அதேபோல் மத்திய அரசு தேர்வான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவிகள் சஹானா,எஸ்.ஆர்.மஞ்சுளா ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு ஸ்ரீ சுபானந்த ஆசிரமம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ஊக்க தொகை பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரம கர்மகர்த்தா சூஸ்மானந்தா தலைமை வகித்தார். முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி பரிசுகளை வழங்கினார்.
Next Story