ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

X
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சி அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பொழியும் கனமழையின் காரணமாகவும், கர்நாடக மாநிலமான கபனி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு காரணமாக இன்று காலை 9 மணி நிலவரப்படி 32 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று ஜூன் 26 பிற்பகல் 2 மணி நிலவரப்படி 42 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது மேலும் கர்நாடகா அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story

