அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
X
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடி, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பக் காலத்தில் வழங்கப்படும் பேறுகால நிதி உதவித்தொகை, ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Next Story